Tuesday 27 September 2011

துளிர் கருத்தாளர்கள் பயிற்சி பட்டறை

துளிர் கருத்தாளர்கள் பயிற்சி பட்டறை
 செப்டெம்பர் 25  அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தில் துளிர் அறிவியல் மைய கருத்தாளர்கள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இக் கூட்டத்தில் முதல்கட்டமாக ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை தற்போது பயன்பாட்டில் உள்ள சமசீர் கல்வி அறிவியல்  புத்தகத்திலிருந்து செயல்பாடுகளை தொகுத்து அதற்கான எளிய அறிவியல் பரிசோதனை உருவாக்கப்பட்டது. இதில் ஆறாம் வகுப்புக்கான பரிசோதனைகளை டாக்டர் ஈஸ்வரி , ஜோதிமுருகன் , மணிமுகிலன், தியாகராஜன் ஆகியோரும் , ஏழாம் வகுப்பிற்கு பேரா. ராஜாமணிக்கம்,  ஐஸ்வர்யா, ராமர், எட்டாம் வகுப்பிற்கு ஆசிரியர் மணிமுருகன், அமலராஜன், காயத்திரி ஆகியோரும் தயாரித்தனர். இப் முகாமில் 25 க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் தயாரிக்கப்பட்டது. இப் பயிற்சியல் மாவட்ட செயலர் கடசாரி, மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் கண்ணன் மற்றும் ஞானசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இப் பயிற்சியின்தொடர்ச்சியாக அக்டோபர் 1 , 2  தேதிகளில் தேனீ மாவட்டத்தில் நடைபெற உள்ளது. 


No comments:

Post a Comment