Saturday 15 October 2011

துளிர் அறிவியல் மையத்தின் - உலக விண்வெளி வாரம் கருத்தரங்கம்


துளிர் அறிவியல் மையத்தின்  - உலக விண்வெளி வாரம்
கருத்தரங்கம்






அக்.4  முதல் 10 வரை உலக விண்வெளி வாரம் மையமாக துளிர் அறிவியல் மையத்தின் சார்பாக  விண்வெளி பற்றிய கருத்தரங்கம், அக் 4 அன்று  அரங்கத்தில் நடைபெற்ற்து. இக்கருத்தரங்கத்தில் கருத்தாளராக திரு.இல.நாராயணசாமி கலந்துகொண்டு விண்வெளி பற்றிய செய்திகளை குழந்தைகள் மத்தியில் எளிய முறையில் விளக்கினார்.  மேலும் உலக  விண்வெளி வாரத்திற்கான காரணம், விண்வெளியில் உள்ள பல்வேறு செய்திகளை, விண்வெளிக்கு பயணம் செய்தவர்கள், கோள்கள் போன்ற கருத்துக்களை  குழந்தைகளுக்கு எளிமையாக விளக்கினார். இக்கருத்தரங்கத்தில் துளிர் இல்லக் குழந்தைகள் கலந்துகொண்டனர்  இக்கருத்தரைங்கத்தின் SIRD தயாரித்துள்ள பெண் சிசு கொலை தொடர்பான உயிர் என்ற குறும்படம் சார்பாக குழந்தைகளுக்கு திரையிட்டு விவாதம் நடைபெற்றது. இறுதியாக ஐசக் நியூட்டன் துளிர் இல்ல மாணவர் மாதவன் நன்றியினை தெரிவித்தார்.

Friday 7 October 2011

துளிர் அறிவியல் மையக் குழந்தைகள் அறிவியல் சுற்றுலா




துளிர் அறிவியல் மையக் குழந்தைகளின்
அறிவியல் சுற்றுலா
அக்.4 ( செவ்வாய்) அன்று துளிர் அறிவியல் மையக் குழந்தைகளுக்கான அறிவியல் சுற்றுலாவாக மதுரை சொக்கிகுளம் பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசு மருத்துவ பூச்சிகள் ஆராய்ச்சி மையத்திற்கு ( ICMR ) சென்றனர்.  சுற்றுலாவாக வந்திருந்த துளிர் இல்லக் குழந்தைகள் 53 நபர்களை மூன்று குழுவாக பிரித்து அவர்களுக்கு ஆய்வகத்தில் எவ்வாறு ஆராய்ச்சி செய்யப்படுகிறது என்பதை விளக்கினர். மேலும் ஆய்வகத்தில் உள்ள கொசுக்களின் ஆராய்ச்சி, கொசுக்களின் வரலாறு, அதனால் ஏற்படும் நோய்கள், அது வளரும் சூழல், புதிய வகை கொசுக்கள், அதன் வளர்ச்சி பற்றி, மதுரையில் கண்டுபிடித்த கொசுக்கள் என இன்னும் பல கருத்துக்களை முழுமையாக மையத்தில் பணியாற்றி வரும் ஆராய்ச்சி மையத்தின் நூலகர் திரு.ராஜமன்னார், ஆய்வக தொழிநுட்ப உதவியாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, பூமிநாதன் ஆகியோர் குழந்தைகளுக்கு விளக்கினர்.  இறுதியாக குழந்தைகளுக்கு மையத்தின் விஞ்ஞானி Dr.பரமசிவம் குழந்தைகள் மத்தியில் கலந்துரையாடல் நடத்தி, கொசுக்கள் பற்றி கேள்விகள் கேட்டு 10 குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.  இறுதியாக மேற்கு கிளைத் தலைவர் திரு.P ஹரிபாபு நன்றி தெரிவித்தார். இச்சுற்றுலாவில் 8 கிராமத்தில் இருந்து 53 நபர்கள் கலந்துகொண்டனர். இச்சுற்றுலாவினை ஒருங்கிணைப்பாளர் பூ.ஜோதிமுருகன் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

Tuesday 27 September 2011

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுக்குகான ஆய்வு குழு குழந்தைகளுக்கு பயிற்சி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுக்குகான  ஆய்வு குழு துளிர் இல்ல  குழந்தைகளுக்கு  பயிற்சி 
செப். 23  அன்று அதலை ஐன்ஸ்டீன் துளிர் இல்லத்தில்  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுக்குகான  ஆய்வு குழு குழந்தைகளுக்கு  பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில்அதலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை  பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.  ஊமையா பாரதி  தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் இரண்டு துளிர் இல்லத்தில் இருவது 10 ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இப்பயிற்சியில் ஆய்வு தலைப்புக்கள் குறித்து துளிர் இல்ல ஒறிங்கினைப்பாளர் B ஜோதிமுருகன் விளக்கினர் . இப்பயிற்சியில் 60  க்கும் மேற்பட்ட குழந்தைகள்  கலந்துகொண்டனர். மீளும் இப்பயிற்சியில் அறிவியல் ஆசிரியை திருமதி. சண்முகசுந்தரி உடன் இருந்து தலைப்புக்கள் , ஆய்வுகள் மேற்கொள்வது குறித்து வழிக்காட்டினார்கள். இறுதியாக துளிர் இல்ல குழந்தை விநோதினி நன்றி தெரிவித்து கொண்டனர்.

முயற்சிகள் என்றும் தோற்பதில்லை

முயற்சிகள் என்றும் தோற்பதில்லை

துளிர் கருத்தாளர்கள் பயிற்சி பட்டறை

துளிர் கருத்தாளர்கள் பயிற்சி பட்டறை
 செப்டெம்பர் 25  அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தில் துளிர் அறிவியல் மைய கருத்தாளர்கள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இக் கூட்டத்தில் முதல்கட்டமாக ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை தற்போது பயன்பாட்டில் உள்ள சமசீர் கல்வி அறிவியல்  புத்தகத்திலிருந்து செயல்பாடுகளை தொகுத்து அதற்கான எளிய அறிவியல் பரிசோதனை உருவாக்கப்பட்டது. இதில் ஆறாம் வகுப்புக்கான பரிசோதனைகளை டாக்டர் ஈஸ்வரி , ஜோதிமுருகன் , மணிமுகிலன், தியாகராஜன் ஆகியோரும் , ஏழாம் வகுப்பிற்கு பேரா. ராஜாமணிக்கம்,  ஐஸ்வர்யா, ராமர், எட்டாம் வகுப்பிற்கு ஆசிரியர் மணிமுருகன், அமலராஜன், காயத்திரி ஆகியோரும் தயாரித்தனர். இப் முகாமில் 25 க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் தயாரிக்கப்பட்டது. இப் பயிற்சியல் மாவட்ட செயலர் கடசாரி, மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் கண்ணன் மற்றும் ஞானசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இப் பயிற்சியின்தொடர்ச்சியாக அக்டோபர் 1 , 2  தேதிகளில் தேனீ மாவட்டத்தில் நடைபெற உள்ளது.